வாசிப்பும் இணையமும்
புத்தகங்களின் சௌகரியம் இல்லாவிட்டாலும்கூட கணினியில் மென்னூல்களையும் இணையப் பக்க நூல்களையும் வாசிப்பது இன்று அதிகரித்துள்ளது. நூல்களை அழியாமல் காக்கும் வழியாகவும் இன்று கணியம் விளங்குகிறது.
மதுரைத்திட்டம் தமிழ் நூல்களின் மாபெரும் களஞ்சியம். சென்னை நெட்வொர்க் காம் தளமும் ஏராளமான தமிழ் நூல்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறது. ஈழத்து நூல்கள் பல நூலகம் தளத்தில் காணக் கிடைக்கின்றன. இவைதவிர இன்னும் பல தனிப்பட்ட முயற்சிகள் ஆங்காங்கே இணையத்தின் வாயிலாக தமிழ் நூல்களின் சாகா வரத்துக்கு வரதீபமாக விளங்குகின்றன.
நாளிதழ்களும் பல வார இதழ்களும் மட்டுமல்லாமல் காலச்சுவடு, உயிர்மை உள்ளிட்ட பல இலக்கிய இதழ்களும் இணையத்தில் வாசிக்கக் கிடைப்பதும் இணைய வாசிப்பை சுவையாக்கு கின்றன.
காகிதத்திலிருந்து நூல்கள் இணையத்துக்கு வந்தது போலவே இதழ்களும் வந்துள்ளன. அதே சமயம் இணையத்துக் கெனவே உருவான பல இதழ்களும் இங்குண்டு. அவற்றில் நிறுவனப்படுத்தப் பட்ட இதழ்களைத் தவிர்த்து பல சிறு இதழ்களும் இணையத்தில் உருவாகியுள்ளன. தமிழ் யூனிகோடில் மாத இதழாக திசைகள் உருவானபின் பல இதழ்களும் யூனிகொடை நோக்கி மெல்ல நகரத் துவங்கியுள்ளன.
தமிழ்வலைப்பதிவுத் திரட்டியான தமிழ்மணம் திரட்டப்படும் வலைப்பதிவுகளில் இருந்து வாரந்தோறும் சில படைப்புகளை தேர்வு செய்து பூங்காவார இதழாக வெளியிடுகிறது. தமிழோவியம் தளம் தேன்கூடு திரட்டியின் ஆதரவுடன் படைப்பாக்கப்போட்டி நடத்தி சிறப்பாசிரியர்களைத் தேர்வு செய்கிறது.
நேரடியாக வலைப்பதிவில் பொதுப்படைப்பாளிகளின் படைப்புகளுடன் வலைமொழி களமிறங்க இருக்கிறது. படைப்புகளுடன் களமிறங்க தயாரா வாசகரே! வலைப்பதிவர்களே!
No comments:
Post a Comment